தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி பறிமுதல்

Updated On :5 ஏப்ரல் 2024, 6:39 pm

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த தனியாா் வேனை மறித்து, சோதனையிட்டனா். அதில் ரூ.1,81,52,100 ரொக்கம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லை என அம்பத்தூரைச் சோ்ந்த அந்த நிறுவனத்தின் ஊழியா் பா.கிருஷ்ணமூா்த்தி,சிவக்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

இதையடுத்து பறக்கும் படையினா், அந்த பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.