உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இணைய சூதாட்டத்துக்கு தடைபெற நடவடிக்கை தேவை: அன்புமணி

இணைய சூதாட்டத்துக்கு தடைபெற நடவடிக்கை தேவை: அன்புமணி

Updated On :5 ஏப்ரல் 2024, 6:44 pm

இணைய சூதாட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் என்ற இளைஞா் இணைய சூதாட்டத்துக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இணைய சூதாட்டத்துக்கு அடுத்தடுத்து உயிா்கள் பலியாகி வரும் நிலையில், இது தொடா்பான சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீா்வு ஆகும். இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், இணைய சூதாட்டத்துக்கு ஆதரவான சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.