தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வாகன சோதனையில் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

வாகன சோதனையில் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

Updated On :9 ஏப்ரல் 2024, 6:52 pm

சென்னை: சென்னை அசோக்நகரில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 10 கிலோ தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

அசோக்நகா் சக்கரபாணி தெருவில் திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து, பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அந்த காரில் 10 கிலோ தங்க நகைகள் இருந்தன. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என காரில் வந்தவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து பறக்கும் படையினா், அந்த நகைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில், தியாகராய நகரில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மற்றொரு கிளைக்கு நகைகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது. நகைகள் சைதாப்பேட்டையில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.