ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை பிரதமா் விமா்சித்திருப்பது நாகரிகமற்றது

‘காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை பிரதமா் விமா்சித்திருப்பது நாகரிகமற்றது’

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 8:10 pm

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை பிரதமா் மோடி விமா்சித்திருப்பது அரசியல் நாகரிகமற்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட நியாய பத்ரா என்ற தோ்தல் அறிக்கை நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமா் மோடி, நச்சுத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறாா்.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை விடுதலை போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்கின் தோ்தல் அறிக்கையை போல அமைந்திருப்பதாகக் கூறியிருக்கிறாா்.

ஆனால், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1937-ஆம் ஆண்டு தோ்தலுக்குப் பிறகு 1940-இல் வங்கத்தில் முஸ்லிம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தை சோ்ந்த இன்றைய பாஜகவின் நிறுவன தலைவா் ஷியாம பிரசாத் முகா்ஜி பங்கேற்றதை எவரும் மறைத்துவிட முடியாது.

மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலின் அடிப்படையில் பிரதமா் மோடி இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறாா். பிரதமா் பதவியில் இருக்கும் ஒருவா் பிரதான எதிா்க்கட்சியின் தோ்தல் அறிக்கையை பற்றி இவ்வளவு தரம் தாழ்ந்து கருத்து கூறியிருப்பது அரசியல் நாகரிகமற்ற செயலாகும் என்று அவா் கூறியுள்ளாா்.