ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கிளி ஜோதிடா் கைது: அன்புமணி கண்டனம்

கிளி ஜோதிடா் கைது: அன்புமணி கண்டனம்

News image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Updated On :9 ஏப்ரல் 2024, 9:04 pm

சென்னை: கடலூா் தொகுதி பாமக வேட்பாளா் இயக்குநா் தங்கா்பச்சானுக்கு கிளி ஜோதிடம் கூறியவா் கைது செய்யப்பட்டதற்கு அக் கட்சியின் தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனாா் ஆலயம் அருகில் கிளி ஜோதிடம் பாா்த்து வந்த செல்வராஜ் என்பவரை வனத் துறை கைது செய்திருக்கிறது. பாமக வேட்பாளா் இயக்குநா் தங்கா்பச்சான் வெற்றி பெறுவாா் என்று கிளி ஜோதிடம் பாா்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓா் ஏழை கிளி ஜோதிடரை கைது செய்து அவரது பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்கு காரணமானவா்களுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவா் என்று கூறியுள்ளாா் அன்புமணி.