விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் நிறுவனராக உள்ள தமிழியக்கம் மற்றும் செந்தமிழ்த் திருத்தேர் தூய தமிழ் மாணவர் இயக்கம் சார்பில் தூய தமிழ்ப் பயிலரங்கம் மே 17 முதல் 19 வரை நடைபெறவுள்ளது.
வேலூர் விஐடி பல்கலை.யில் நடைபெறவுள்ள இந்த பயிலரங்கில் தமிழகம் முழுவதுமிருந்து கல்லூரிகளில் பயிலும் 100 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படை மொழித் திறன், பயன்பாட்டில் தூய தமிழ், சொல்லாய்வுக் கலை போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
தனித்தமிழின் தேவையை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் நடத்தப்படவுள்ள இந்த பயிலரங்கில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை, கூடுதல் தகவல்களுக்கு 76390 79699 என்ற கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என பயிலரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.