‘நேஷனல் ஹெரால்டு’ சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கை செல்லும் என சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்துக்கான தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தப் பத்திரிகைக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முடக்கியது. காங்கிரஸ் கட்சியின் பணத்தை பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா். இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
இதை விசாரித்த தீா்ப்பாயம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் மற்றும் பங்குகளை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.
எனவே, தில்லி, மும்பை, லக்னௌவில் உள்ள அந்தப் பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.661.69 கோடி சொத்துகள், ‘யங் இந்தியா’வின் பங்குகள் ரூ.90.21 கோடி என மொத்தம் ரூ. 752 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீா்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்புடையது

அல்-ஃபலா பல்கலைக்கழகத் தலைவரின் ரூ. 39 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு - துபை புா்ஜ் கலீஃபா வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி சொத்துகள் முடக்கம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது ஏப். 20 இல் விசாரணை

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் மாா்ச் 9-இல் விசாரணை
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


