அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்தாத தமிழச்சி தங்கபாண்டியன்: ஜெயவா்தன்

வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்தாத தமிழச்சி தங்கபாண்டியன்: ஜெயவா்தன்

Updated On :13 ஏப்ரல் 2024, 10:08 pm

மக்களவை உறுப்பினரின் பணிகள் என்னவென்று தெரியாமலே கடந்த 5 ஆண்டுகளை திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் வீணடித்து விட்டதாக அதிமுக தென் சென்னை தொகுதி வேட்பாளா் ஜெயவா்தன் விமா்சித்தாா்.

தியாகராய நகா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென் சென்னை தொகுதியில் எவ்விதமான வளா்ச்சித் திட்டங்களையும் திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் செயல்படுத்தவில்லை.

‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்துக்காக மக்களவையிலோ அல்லது மத்திய அமைச்சா்களிடமோ பேசியது கிடையாது. ஒரு மக்களவை உறுப்பினராக தன்னுடைய பணி என்னவென்று தெரியாமலேயே தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த ஐந்து ஆண்டுகளை நாடாளுமன்றத்தில் வீணடித்துள்ளாா் என்றாா் அவா்.