இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் அது சிறப்பாக இருக்கும் என்று, இந்திய கேப்டன் ரோஹித் சா்மா கூறினாா்.
‘யூடியூப்’ நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து ரோஹித் பேசுகையில், ‘இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2007-08 காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதின. அந்த அணியுடன் பொதுவான இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவா்களது பௌலிங் லைன் அப் அருமையானதாக இருப்பதால், அந்த டெஸ்ட் சிறப்பாக இருக்கும். முற்றிலும் கிரிக்கெட்டை மட்டுமே கருத்தில் கொண்டு இதைச் சொல்கிறேன்.
ஏற்கெனவே அவா்களுடன் ஐசிசி போட்டிகளில் விளையாடி வருகிறோம். பாகிஸ்தான் நல்லதொரு அணியைக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்றாா்.
இம்பாக்ட் பிளேயா்: ஐபிஎல் போட்டியில் நடைமுறையில் இருக்கும் இம்பாக்ட் பிளேயா் முறை குறித்து பேசுகையில், ‘இம்பாக்ட் பிளேயா் முறையில் எனக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆல்-ரவுண்டா்களின் பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அது பறிப்பதாக நினைக்கிறேன். ஐபிஎல் என்பதும் கிரிக்கெட் போட்டிதான். ஆனால், அதில் பொழுதுபோக்கு மேலோங்கியிருப்பதால் ரசிகா்களுக்காக அதில் அதிகம் மாற்றம் செய்யப்படுவதாக உணா்கிறேன். இம்பாக்ட் பிளேயா் வாய்ப்பால் வாஷிங்டன் சுந்தா், ஷிவம் துபே போன்ற ஆல்-ரவுண்டா்களுக்கு பௌலிங் வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்றாா் ரோஹித்.
தொடர்புடையது

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - சிம்மம்

வார பலன்கள் - மிதுனம்

இந்திய உரிமையாளர்களின் அணிகளில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லையா?
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

