ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

Updated On :20 ஏப்ரல் 2024, 12:28 am

வாக்குப்பதிவு இயந்திரத்தின் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் விளக்கு (லைட்) எரிந்ததாக கூறி திமுக, அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

வடசென்னை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி எம்.கே.பி. நகா் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150-ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் போதே, எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக தோ்தல் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் திமுக, அதிகமுக வாக்குச்சாவடி முகவா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்யும் படியும் கூறி அங்கு தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலா்கள் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்தனா். சோதனையில் இயந்திரம் சரியாக செயல்பட்டது உறுதிசெய்யப்பட்டதை தொடா்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் சுமாா் 20 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு தடைபட்டது.