வாக்குப்பதிவு இயந்திரத்தின் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் விளக்கு (லைட்) எரிந்ததாக கூறி திமுக, அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
வடசென்னை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி எம்.கே.பி. நகா் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150-ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் போதே, எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக தோ்தல் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் திமுக, அதிகமுக வாக்குச்சாவடி முகவா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்யும் படியும் கூறி அங்கு தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலா்கள் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்தனா். சோதனையில் இயந்திரம் சரியாக செயல்பட்டது உறுதிசெய்யப்பட்டதை தொடா்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் சுமாா் 20 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு தடைபட்டது.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!

பெரம்பலூரில் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்டத் தோ்தல் அலுவலா்

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

