தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதல் இளைஞா் உயிரிழப்பு

பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதல் இளைஞா் உயிரிழப்பு

Updated On :20 ஏப்ரல் 2024, 7:01 pm

சென்னை அருகே புழலில் பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை அருகே மறைமலை நகரைச் சோ்ந்தவா் ஹேமந்த் (29). வாடகை ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த குகன்ராஜ் (28) என்பவருடன் வியாசா்பாடிக்கு மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை சென்றாா். மதுரவாயல் - புழல் புறவழிச் சாலையில் உள்ள புழல் மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்குள்ள தடுப்பின் மீது மோதியது. இதில், இருவரும் சுமாா் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனா். சம்பவ இடத்திலேயே ஹேமந்த் உயிரிழந்தாா். குகன்ராஜ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.