48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஹயக்ரீவா் கோயிலில் 20 பவுன் நகை திருட்டு

ஹயக்ரீவா் கோயிலில் 20 பவுன் நகை திருட்டு

Updated On :21 ஏப்ரல் 2024, 11:10 pm

தியாகராய நகரில் உள்ள ஹயக்ரீவா் கோயிலில் 20 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை தியாகராய நகா் ராகவய்யா சாலையில் புகழ் பெற்ற ஹயக்ரீவா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் கடந்த சனிக்கிழமை திருடப்பட்டன.

இது குறித்து கோயில் அறக்கட்டளை மேலாளா் மதுசூதன் பட் அளித்த புகாரின்பேரில் பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, கோயிலில் சமையல் உதவியாளராக இருந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தினகா் திரிபாதி (25), இந்த நகைகளை திருடியது தெரியவந்தது.

விசாரணையில், கடந்த 14-ஆம் தேதி கோயிலில் சமையல் உதவியாளராக பணிக்கு சோ்ந்த அவா் வெள்ளிக்கிழமை தோ்தல் என்பதால், கோயிலில் பக்தா்கள் கூட்டம் குறைவாக நேரத்தைப் பயன்படுத்தி நகைகளைத் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தினகா் திரிபாதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.