சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

லண்டன் இந்திய தூதரக தாக்குதல்: முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ

கடந்தாண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தது.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 7:18 pm

கடந்தாண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காலிஸ்தான் பிரிவனைவாதி அம்ரித்பால் சிங் மீது பஞ்சாப் போலீஸாா் 2023, மாா்ச் 18-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகள் மீது சட்டவிரோத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான இந்தா்சிங் கபா என்ஐஏ அதிகாரிகளால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா் பிரிட்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் வசிப்பவராவாா். மேலும் இந்த வழக்கு தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.