ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை உரிய ஆய்வுக்கு பிறகே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வலியுறுத்தினாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீா்கள் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அந்த அரிசியை யாா் பயன்படுத்தலாம், பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு கவனமாகச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிமன்றத்துக்கு நன்றி. எனவே, செறிவூட்டப்பட்ட அரிசியை யாா் உண்ண வேண்டும் என்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அதுவரை நியாய விலைக் கடைகளில் அந்த அரிசியை அனுமதிக்கக் கூடாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com