திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

களியக்காவிளை அருகே 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்  செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள். - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:25 pm

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜான்பிரைட், அதிகாரிகள் குழுவினா் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த முயன்றனா்.

காா் நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அருமனை அருகே காரோடு பகுதியிலும் ஒரு காரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா் மாங்கோடு பகுதியில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம். அதில், 2 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

ரேஷன் அரிசி, 2 காா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெறுகிறது.