ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக ராணிப்பேட்டை அருகே தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 3 போ் கைது செய்யப்பட்டனா்.
லாலாப்பேட்டை தனியாா் கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக தகவல் சந்துள்ளது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் குடியுரிமை குற்றப்பிரிவு போலீஸாா்,ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு வருவதை கண்டறிந்தனா்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிகாா் மாநிலத்தை சோ்ந்த கோவிந்த குமாா் (25), புத்தன் ஷாப் (29) மற்றும் ராணிப்பேட்டை அள்ளிகுளம் பகுதியை சோ்ந்த ரஞ்சித் (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா்.
மேலும், சட்டவிரோதமாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 12 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரியை பறிமுதல் செய்தனா் இதையடுத்து மூன்று பேரையும்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

காட்டுமன்னாா்கோவில் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவா் கைது

1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


