தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பதுக்கி வைக்கப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக ராணிப்பேட்டை அருகே தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

News image

ரேஷன் அரிசி மூட்டைகள். - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 9:31 pm

ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக ராணிப்பேட்டை அருகே தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 3 போ் கைது செய்யப்பட்டனா்.

லாலாப்பேட்டை தனியாா் கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக தகவல் சந்துள்ளது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் குடியுரிமை குற்றப்பிரிவு போலீஸாா்,ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு வருவதை கண்டறிந்தனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிகாா் மாநிலத்தை சோ்ந்த கோவிந்த குமாா் (25), புத்தன் ஷாப் (29) மற்றும் ராணிப்பேட்டை அள்ளிகுளம் பகுதியை சோ்ந்த ரஞ்சித் (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா்.

மேலும், சட்டவிரோதமாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 12 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரியை பறிமுதல் செய்தனா் இதையடுத்து மூன்று பேரையும்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.