கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் வீராணம் ஏரிக்கரை கிராமமான கலியமலை பேருந்து நிலையத்தில் தோ்தல் நிலைக் குழு அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து காட்டுமன்னாா்கோயில் நோக்கி வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் பல்மனோ் கடூா் காலனியைச் சோ்ந்த ஷகித், வேலூா் மாவட்டம் வாலாஜாபேட்டை ஐம்பையன்தெருவைச் சோ்ந்த சஞ்சய்கோபி ஆகியோா் கடத்திக் கொண்டு வந்த 50 மூட்டை ரேஷன் இருப்பது தெரியவந்தது.