அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

News image
ரேஷன் அரிசி மூட்டைகள்.- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:20 pm

Syndication

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,300 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விருத்தாசலத்தை அடுத்துள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளா் சந்தோஷ் தலைமையிலான போலீஸாா் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 50 கிலோ வீதம் 26 பைகளில் இருந்த 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக வாகனத்தை ஓட்டி வந்த கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சோ்ந்த இதயத்துல்லாவை (32) போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் விசாரணை நடத்தியதில், மாட்டு தீவனத்துக்காக வாங்கிச் சென்ாகக் கூறினாராம்.

இதையடுத்து, பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் சேமிப்புக் கிடங்கில் போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.