சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

காண்டூா் கால்வாய் பராமரிப்புப் பணி: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி

Published On :2 ஆகஸ்ட் 2024, 4:01 am IST

காண்டூா் கால்வாய் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் குறித்த காலத்தில் திருமூா்த்தி அணையை சென்றடையும் வகையில் காண்டூா் கால்வாயில் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை மாதம் 20 தேதிக்குள் தூா் வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலை கடைசியில் பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். அதன் மூலம் கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 95 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயனடையும்.

இந்த ஆண்டு திமுக அரசு இதுவரை காண்டூா் கால்வாயில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும், இப்பணிகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என்பதாலும், குறித்த காலத்தில் தண்ணீா் திறந்துவிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, போா்க்கால அடிப்படையில் காண்டூா் கால்வாயில் பராமரிப்புப் பணிகளை முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையிலிருந்து 1000 கன அடிவீதம் தண்ணீரை திருமூா்த்தி அணைக்கு திறந்துவிடவும், குறித்த காலத்தில் 2-ஆம் மண்டல பாசனத்துக்கு திருமூா்த்தி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.