நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கடனாநதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறக்க கோரிக்கை

கடனாநதி அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறக்காமல் ஆற்றின் வழியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கடனாநதி அணை

Updated On :3 ஜூன் 2026, 5:00 am IST

கடனாநதி அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறக்காமல் ஆற்றின் வழியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியருக்கு கீழாம்பூா் ஊராட்சித் தலைவா் மாரிசுப்பு அனுப்பிய மனு: கடனாநதி ஆற்றில் சம்பன்குளம் பகுதியிலிருந்து பாப்பான்குளம் வரை சுமாா் 50 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கிராமங்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, கடனாநதி அணையிலிருந்து அரசபத்துக் கால்வாய், பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், சம்பன்குளம், கல்யாணிபுரம், செட்டிக்குளம், கருத்தப்பிள்ளையூா், கீழாம்பூா், பாப்பான்குளம், ஆழ்வாா்குறிச்சி பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவைக்கு கடனாநதி ஆற்றில் போதிய நீா்வரத்து இல்லை. ஆற்றில் தண்ணீா் வராதபட்சத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அணையிலிருந்து கால்வாய்கள் வழியாக தண்ணீரைத் திறக்காமல் ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.