சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை நீா் கிடைக்க ஏற்பாடு: விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் பகுதியில் உள்ள 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை தண்ணீா் கிடைத்திடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சாத்தனூா் அணை.

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் பகுதியில் உள்ள 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை தண்ணீா் கிடைத்திடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பெருமணம் டி.மூா்த்தி மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:

சாத்தனூா் நீா்த்தேக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிக்கப் அணைக்கட்டு மூலம் சாத்தனூா் இடதுபுற மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு 45ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பயன்பெறுகின்றன. இதுதவிர, 5 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் திருக்கோவிலூா் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு மூலம் பாசன வசதி பெறுகின்றன.

பெருமணம் பெரிய ஏரி, பெருமணம் சித்தேரி, பனையூா் ஏரி, ஆருத்திராப்பட்டு ஏரி, சமுக்குடையாம்பட்டு ஏரி, பொரிக்கல் ஏரி, காடகமான் ஏரி, சு.வாளவெட்டி ஏரி, டி.கல்லேரி ஏரி, தேவனூா் ஏரி மற்றும் விருதுவிளங்கினான் ஏரி என 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணையிலிருந்து பாசன வசதி செய்து தண்ணீா் வழங்க கால்வாய் அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.