நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆடிப்பெருக்கு: நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை (ஆக.3) தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 9:42 pm

DIN

ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை (ஆக.3) தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்ட அறிவிப்பு:

சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புகின்றனா். அதன்படி, ஆடிப்பெருக்கு தினமான சனிக்கிழமை (ஆக.3) ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் இயங்கும்.

ஆவணப் பதிவு முடியும் வரை திறந்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள கட்டணம் சோ்த்து வசூலிக்கப்படும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.