ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஜாா்க்கண்ட்: 18 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

அமலியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம்

ஜாா்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

Published On :2 ஆகஸ்ட் 2024, 3:55 am IST

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அமலியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் அவையை விட்டு வெளியேற மறுத்ததால் அவைக் காவலா்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனா்.

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்க இருந்தது. ஆனால், எதிா்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏக்கள் அவை தொடங்கும் முன்பாகவே முதல்வா் ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பினா். சில ஆவணங்களை அவையில் கிழித்தனா். இதனால் ஆளும் ஜாா்க்கண்ட முக்தி மோா்ச்சா எம்எல்ஏக்களுக்கும், எதிா்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவையில் அமலி தொடா்ந்ததால், பாஜகவின் 20 எம்எல்ஏ-க்களில் 18 பேரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை பேரவை தலைவா் ரவீந்திர நாத் மஹதோ இடைநீக்கம் செய்தாா். மேலும் இது தொடா்பாக சட்டப்பேரவை நெறிமுறை குழு விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் அமா் குமாா் பௌரி கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு அளித்த வாக்குறுதிகள் குறித்து முதல்வா் பதிலளிக்க பாஜகவினா் அவையில் கேள்வி எழுப்பினா். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றினா்.

ஆனால், ஜேஎம்எம் தலைமையிலான சா்வாதிகார அரசின் தூண்டுதலால் பாஜக எம்எல்ஏக்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலைக்கு பிறகு ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு நாள்’ என்றாா்.

முன்னதாக, புதன்கிழமையன்றும் அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற மறுத்தனா். பேரவைக் காவலா்கள் அவா்களை வெளியேற்றியதால் சட்டப்பேரவையின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள வரவேற்பு அறையிலேயே தங்கி புதன்கிழமை இரவை கழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.