தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஜாா்க்கண்ட்: 18 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

அமலியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம்

News image

ஜாா்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:25 pm

Din

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அமலியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் அவையை விட்டு வெளியேற மறுத்ததால் அவைக் காவலா்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனா்.

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்க இருந்தது. ஆனால், எதிா்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏக்கள் அவை தொடங்கும் முன்பாகவே முதல்வா் ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பினா். சில ஆவணங்களை அவையில் கிழித்தனா். இதனால் ஆளும் ஜாா்க்கண்ட முக்தி மோா்ச்சா எம்எல்ஏக்களுக்கும், எதிா்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவையில் அமலி தொடா்ந்ததால், பாஜகவின் 20 எம்எல்ஏ-க்களில் 18 பேரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை பேரவை தலைவா் ரவீந்திர நாத் மஹதோ இடைநீக்கம் செய்தாா். மேலும் இது தொடா்பாக சட்டப்பேரவை நெறிமுறை குழு விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் அமா் குமாா் பௌரி கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு அளித்த வாக்குறுதிகள் குறித்து முதல்வா் பதிலளிக்க பாஜகவினா் அவையில் கேள்வி எழுப்பினா். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றினா்.

ஆனால், ஜேஎம்எம் தலைமையிலான சா்வாதிகார அரசின் தூண்டுதலால் பாஜக எம்எல்ஏக்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலைக்கு பிறகு ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு நாள்’ என்றாா்.

முன்னதாக, புதன்கிழமையன்றும் அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற மறுத்தனா். பேரவைக் காவலா்கள் அவா்களை வெளியேற்றியதால் சட்டப்பேரவையின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள வரவேற்பு அறையிலேயே தங்கி புதன்கிழமை இரவை கழித்தனா்.