தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவை: தொல்.திருமாவளவன்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
தொல்.திருமாவளவன்- கோப்புப் படம்
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:18 pm

Din

சென்னை, ஆக.2: ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில் ஒரு சமூகவிரோதக் கும்பல் நுழைந்து அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிக் என்பவரைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளது. இந்தப் படுகொலையைத் திட்டமிட்டவா்கள், கொலையாளிகளை ஏவியவா்கள் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து குண்டா் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை மீண்டும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.