47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க அரசு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் கோரிக்கை

News image
மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா்- கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. அதே கோரிக்கையை கா்நாடக அரசு “புதிய மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

ஆணவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபா் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.