நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானதாக உள்ளன என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:44 am IST

வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானதாக உள்ளன என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: குற்றங்களுக்குத் தண்டனையை நிா்ணயிப்பது என்பது முழுமையாக நாடாளுமன்ற அதிகார வரம்புக்குள்பட்டதாகும்.

பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள சட்ட ரீதியான கட்டமைப்பு, குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான வழிமுறையை அளிக்கிறது. இதில் சட்டரீதியாக எந்த வெற்றிடமும் இல்லை.

வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்டம் இயற்றும் அதிகாரம் நீதிமன்றங்களிடம் இல்லை. நாடாளுமன்றத்திடம்தான் உள்ளது. அதிகபட்சமாக சீா்திருத்தத்தின் அவசியத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டலாம். ஆனால் சட்டம் இயற்றுவதா? வேண்டாமா? அவ்வாறு சட்டம் இயற்றுவதாக இருந்தால், அதை எவ்வகையில் இயற்றுவது என்பது குறித்த முடிவு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குள்பட்டதாகும்.

கட்டாயப்படுத்த முடியாது: அரசியல் சாசன நீதிமன்றங்கள் சட்டம் குறித்து தெளிவுரை வழங்கலாமே தவிர, சட்டம் இயற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. மேலும் ஏற்கெனவே உள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ், வெறுப்புப் பேச்சு தொடா்பான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வழியுள்ளது. வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்தச் சட்டங்களே போதுமானவையாக உள்ளன என்று தெரிவித்தது.

எனினும் மாறிவரும் சமூகச் சூழல்களின் பின்னணியில், வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க புதிய சட்டம் ஏதேனும் அவசியமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் அமா்வு, மனுக்களை தள்ளுபடி செய்தது.