பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அலுவலக ஆவணங்களை காணவில்லை: பாஜக நிா்வாகி புகாா்

தனது அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த ஆவணங்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக, பாஜக நிா்வாகி புகாா் கொடுத்துள்ளாா்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:44 pm

Din

சென்னை, ஆக.2: தனது அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த ஆவணங்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக, பாஜக நிா்வாகி புகாா் கொடுத்துள்ளாா்.

சென்னை தியாகராயநகா் திருமலைபிள்ளைத் தெருவை சோ்ந்தவா் சுப்ரமணிய பிரசாத்(52). பாஜக மாநில செய்தித் தொடா்பாளராக இருந்து வருகிறாா். இவா், இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில், ‘மெட்ராஸ் எஸ்டேட்’ எனும் பெயரில் கட்டுமானம் தொடா்பான அலுவலகம் நடத்தி வந்துள்ளாா்.

அந்த கட்டடத்தின் உரிமையாளரான சுகன்யா ராதாகிருஷ்ணன், அலுவலகத்தை காலி செய்யும் படி வற்புறுத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், கட்டடத்தின் உரிமையாளராக சுகன்யா ராதாகிருஷ்ணன், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதுடன், இந்த அலுவலகம் தனது அலுவலகம் எனக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுப்ரமணிய பிரசாத், சுந்தரபாண்டியனாா் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கட்டடத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.