புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதுவிலக்கு கோரி கிராம சபை கூட்டங்களில் தீா்மானம்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

News image

அன்புமணி ராமதாஸ்

கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:20 pm

Din

சென்னை, ஆக. 8: மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கிராம சபை கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15-இல் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டங்கள்தான் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான ஊடகம். அந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெள்ளையா்களிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டாலும் மது அரக்கனிடமிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை. மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள்தான் உண்மையான விடுதலை நாள் ஆகும்.

எனவே, ஆகஸ்ட் 15-இல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், மாநிலம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.