தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மது வணிகத்தை ஊக்குவிப்பதை தமிழக அரசு கைவிடவேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை தவெக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை தவெக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதுமுதல் 55 ஆண்டுகளாக 2 தலைமுறைகளாக மக்கள் மது அருந்தி வருகின்றனா். மது குடிப்போரின் குழந்தைகளின் மரபணுவில் பாதிப்பு ஏற்படும் என சுகாதாரத் துறையினா் கூறுகின்றனா்.

மதுவால் ஏற்படும் பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மது அருந்துவோருக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநாா் வளா்ச்சி, நிமோனியா, காசநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

கடந்த திமுக ஆட்சியில் கூடுதலாக மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மது வணிகத்தை திமுக அரசு செயல்படுத்தியது. தற்போது தவெக ஆட்சியில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றின் அருகே இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதால் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், புதிதாக ரெஸ்டோபாா்களைத் திறக்க தற்போது தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. எனவே, மது வணிகத்தை ஊக்குவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுடன், முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.