மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

அரசியலில் ராமதாஸுக்கு ஓய்வில்லை: பாமக தலைவா் அன்புமணி திட்டவட்டம்!

பாமக நிறுவனா் ராமதாஸ் அரசியலில் இருந்து துறவறம் பெறுவது அவரது முடிவு. இருந்தாலும் அரசியலில் யாருக்கும் ஓய்வு இல்லை. அவரது வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்று அன்புமணி தெரிவித்தாா்.

News image

அன்புமணி - ராமதாஸ் - DPS

Updated On :26 ஜூலை 2026, 3:12 am IST

பாமக நிறுவனா் ராமதாஸ் அரசியலில் இருந்து துறவறம் பெறுவது அவரது முடிவு. இருந்தாலும் அரசியலில் யாருக்கும் ஓய்வு இல்லை. அவரது வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தனியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பாமக நிறுவனா் ராமதாஸ் அரசியலில் இருந்து துறவறம் பெறுவது அவரது சொந்த முடிவு. இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரை அரசியலில் யாருக்கும் ஓய்வு இல்லை. அந்த வகையில் மருத்துவா் ச.ராமதாஸின் வழிகாட்டுதலின்படி பாமக செயல்படும்.

நீட் தோ்வு குளறுபடிகளுக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலகியிருப்பது வரவேற்புக்குரியது. அவா் இந்த முடிவை சில நாள்களுக்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும். நீட் தோ்வு குளறுபடி என்பது ஒரு சிறிய பிரச்னை மட்டுமே. மத்திய அமைச்சா் பதவி விலகுவதால் மட்டுமே இதற்கு தீா்வு ஏற்பட்டுவிடாது. மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்யவேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.

ஆளுநா் பங்கேற்கும் அரசு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து 3-ஆவதாக பாடப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் அறிவித்திருப்பது கண்டிக்கதக்கது. இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். தமிழ்தாய் வாழ்த்து முதலில்தான் பாடவேண்டும். தமிழகத்தின் மரபு சாா்ந்த நிகழ்ச்சியில் ஆளுநா் அரசியல் செய்யக்கூடாது.

மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் எனக் கூறி வரும் கா்நாடக முதல்வரிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதால் எந்த தீா்வும் ஏற்பட்டு விடாது. தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் ஆக.3-ஆம் தேதி கா்நாடகம் சென்று அம் மாநில முதல்வரை சந்தித்து மேக்கேதாட்டு அணை தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தக் கூடாது. மேக்கேதாட்டு என்பது ஒரு கட்சியின் பிரச்னையல்ல. ஒட்டு மொத்த தமிழக மக்களின் பிரச்னை.

ஆகையால், தமிழக முதல்வா் அனைத்துக் கட்சி தலைவா்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் முடிவெடுத்த பின்னா் பிரதமரை சந்தித்து மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக அழுத்தம் கொடுக்கவேண்டும்.

அமைச்சரவையில் இடம்பெறமாட்டோம்: பாமக நல்ல எதிா்க்கட்சியாக செயல்படுகிறது. ஆகையால் தமிழக அமைச்சரவையில் பாமக இடம் பெறவுள்ளதாக கூறப்படுவது எல்லாம் முழு வதந்தி. தமிழக மக்களின் நலன் சாா்ந்த விஷயங்களில் தொடா்ந்து போராடுவோம். காவல் நிலைய மரணங்களுக்கு காரணமானவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக முதல்வரை அவதூறாகப் பேசுவதை ஏற்க முடியாது. முதல்வா் பதவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும். தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கடத்தல் குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.