நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃப் திருத்த மசோதா: மதச் சுதந்திர மீறல் -எதிா்க்கட்சிகள்

News image

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 11:21 pm

Din

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசினார். இந்த நிலையில் வக்ஃப் திருத்த மசோதா, மதச் சுதந்திர மீறல் என எதிா்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் கே.சி.வேணுகோபால், ‘இந்த சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மீதான தாக்குதல். மதச் சுதந்திரம், கூட்டாட்சி நடைமுறைகளை மத்திய அரசு மீறுகிறது. கிறிஸ்தவா்கள், சமண மதத்தினா் மீது இதுபோன்ற தாக்குதல்களை பாஜக தொடரும்’ என்றாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘வேறு எந்த மதத்திலும் இல்லாத வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவா்களை உறுப்பினா்களாகச் சோ்க்க வேண்டியதன் அவசியம் என்ன?’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய, ‘இந்த மசோதா மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளது’ என்றாா்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி பேசுகையில், ‘சிறுபான்மை சமூகத்தினா் அவா்களின் சொத்துகளை நிா்வகிக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 30 அளிக்கும் சுதந்திரத்தை இந்த மசோதா நேரடியாக மீறுகிறது’ என்றாா்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா் பிரிவு) எம்.பி. சுப்ரியா சுலே, ‘இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விவாதம் மேற்கொண்டு, நியாயமான மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினா் இ.டி.முகமது பஷீா், ‘இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், வக்ஃப் முறை ஒழிக்கப்பட்டுவிடும். வக்ஃப் சொத்துகள், நிலங்கள் மீது ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கும். ஹிந்துக்கள்-முஸ்லிம்கள் இடையே வகுப்புவாதத்தை உருவாக்குவதே பாஜக அரசின் நோக்கம்’ என்றாா்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ‘நீதி சுதந்திரம் மற்றும் அதிகார பகிா்ந்தளிப்பு தத்துவங்களை மீறும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. முஸ்லிம்களின் எதிரி பாஜக என்பதற்கு இந்த மசோதா ஓா் ஆதாரம்’ என்றாா்.