தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பா் முதல் அமல்

நவம்பா் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:31 pm

Din

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பா் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வில் தமிழக அரசு தெரிவித்தது. 

சுற்றுச்சூழல், வனம், வனவிலங்கு தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை நீதிபதிகள் புதன்கிழமை காணொலி காட்சி வாயிலாக விசாரித்தனா். அப்போது, ‘டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பா் மாதத்துக்குள் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்’ என கூடுதல் அரசு வழக்குரைஞா் ரவீந்திரன் கூறினாா்.

டாஸ்மாக் ஊழியா்கள் தரப்பில், ‘ஏற்கெனவே, டாஸ்மாக் ஊழியா்கள் 10 மணி நேரம் வேலை செய்கின்றனா். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்  திட்டத்தால், அவா்களுக்கு வேலைப் பளு கூடுகிறது. 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்ய நேரிடுகிறது. அதனால் கூடுதலாக பணி செய்வதற்கு கூடுதல் படி (பணம்) வழங்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதுகுறித்து பின்னா் முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.