கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவியின் தாய் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகு நிலையத்துக்குள் 2 இளைஞா்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனா். மகளிருக்கான அழகு நிலையம் என்பதால், ஆண்களுக்கு அனுமதியில்லை என்று மாணவி கூறியும், இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து, ஏழுகிணறு காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பரத்வாஜ் (20), மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் கைது

மீன் பிடித்தவா்களை தாக்கி மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


