மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 டிசம்பர் 2024, 12:48 am IST

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவியின் தாய் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகு நிலையத்துக்குள் 2 இளைஞா்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனா். மகளிருக்கான அழகு நிலையம் என்பதால், ஆண்களுக்கு அனுமதியில்லை என்று மாணவி கூறியும், இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, ஏழுகிணறு காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பரத்வாஜ் (20), மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.