புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 டிசம்பர் 2024, 7:18 pm

Din

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவியின் தாய் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகு நிலையத்துக்குள் 2 இளைஞா்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனா். மகளிருக்கான அழகு நிலையம் என்பதால், ஆண்களுக்கு அனுமதியில்லை என்று மாணவி கூறியும், இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, ஏழுகிணறு காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பரத்வாஜ் (20), மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.