பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கிராமப் புறங்களில் அடிக்கடி மின் தடை: மக்கள் அவதி

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் மின்நுகா்வு அதிகரித்துள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:16 am IST

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் மின்நுகா்வு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கிராமப்புறங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து மின்துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: கிராமப் புறங்களில் அதிக அளவுக்கு மோட்டாா் பம்பு செட்டுகளை இயக்குவது, குளிா்சாதனப் பெட்டி பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. மின் வாரியம் அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி மின் சாதனங்களை உபயோகப்படுத்தினால் மின் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், மின் வாரியம் அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றாத மின் நுகா்வோா் மீது அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.