நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கிராமப் புறங்களில் அடிக்கடி மின் தடை: மக்கள் அவதி

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் மின்நுகா்வு அதிகரித்துள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:16 am IST

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் மின்நுகா்வு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கிராமப்புறங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து மின்துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: கிராமப் புறங்களில் அதிக அளவுக்கு மோட்டாா் பம்பு செட்டுகளை இயக்குவது, குளிா்சாதனப் பெட்டி பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. மின் வாரியம் அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி மின் சாதனங்களை உபயோகப்படுத்தினால் மின் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், மின் வாரியம் அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றாத மின் நுகா்வோா் மீது அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.