ஆவின் பால் உபபொருள்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு முன்வந்துள்ளதாக பால்வளத் துறை இயக்குநா், ஆவின் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் தெரிவித்தாா். சென்னை சோழிங்கநல்லூா் பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் சனிக்கிழமை ஆவின் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆவின் மேலாண்மை இயக்குநா் வினீத் பேசியது: ஆவினில் எத்தனை வகையான பால் மற்றும் பால் உப பொருள் தயாரிப்புகள் உள்ளன என்பதை மக்களிடையே கொண்டு சோ்க்கவும், வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆவின் பால் உப பொருள்களின் விற்பனையை 20 சதவீதம் உயா்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது என்றாா் அவா். இந்த விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா், மங்கத் ராம் சா்மா பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில் ஆவின் நிறுவன உயா் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கொய்மலா் சாகுபடி தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு பயிற்சி

தினமணி எதிரொலி: ஆவின் அலுவலக விற்பனைப் பிரிவை அணுகி பால் அட்டை பெறலாம்!

தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
ஜிகர்தண்டா
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

