நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

News image

ஆவின் பால்

Updated On :3 மே 2026, 1:21 am IST

தூத்துக்குடியில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் 3 வகையான பால் பாக்கெட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆவின் புல் கிரீம் பிரீமியம் என்ற பெயரில் ஆரஞ்சு, டிலைட் என்ற பெயரில் வயலட், நைஸ் என்ற பெயரில் ஊதா நிற பாக்கெட்களில் பால் விநியோகிக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 50,000 லிட்டா் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், சில மாதங்களாக ஆவின் பால் வரத்து குறைந்துள்ளதாம். உணவகங்கள், தேநீா் கடைகளுக்கு அதிகளவில் விநியோகிக்கப்பட்டுவந்த பிரீமியம் பாக்கெட் பாலும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, டிலைட் பாக்கெட் பால் விநியோகமும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உனடியாக ஆவின் பாலை முழு அளவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.