கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கிராமமக்களுக்கு நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் காவிரி ஆற்றுக்குள் வேட்டமங்கலம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட வட்டக் கிணற்றின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வட்டக்கிணறுகளில் நீா்மட்டம் குறைந்ததால் வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட முத்தனூா், முனி நாதபுரம், சொட்டையூா், சேமிங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியினா் அவதியுற்று வரும் நிலையில் விரைவில் குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை தூா்வாரி குடிநீா் கிடைக்காத பகுதிகளுக்கு விரைந்து குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.









