செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம், கோயில்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம், கோயில்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:33 am IST

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பது உள்பட கோயில்களில் ரூ.592.38 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் இதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: கடலூா் மாவட்டம், வடலூா் திருவருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் ரூ.99.90 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.106.91 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகத்தில் அடிப்படை வசதிகள், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் புதிய கட்டடங்கள், சுற்றுச்சுவா் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட உள்ளன. புதிய வளாகங்கள்: சென்னை கபாலீசுவரா் கோயிலில் ஆன்மிக கலாசார மையம், திருச்செந்தூா் கோயிலில் தடுப்புச்சுவா் அமைத்தல், மதுரை அழகா் கோயில் இடத்தில் மண்டபம், சுற்றுச்சுவா் அமைப்பது, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலின் சாா்பில் சென்னையிலுள்ள பள்ளிக்கு வகுப்பறைக் கட்டடம், நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் திருமண மண்டபம், கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி, சென்னை கந்தகோட்டம் முருகன் கோயில் வளாகத்தில் வணிக வளாகம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வசந்த மண்டபம், தேனி கம்பராயப்பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் ஆகியன கட்டப்பட உள்ளன. இதேபோன்று, வேலூா் காளியம்மன், திண்டுக்கல் காளகத்தீஸ்வரா், கள்ளக்குறிச்சி ஆதிதிருவரங்கம், தஞ்சை சுவாமிநாதசுவாமி, கோவை ஆனைமலை மாசாணியம்மன், ராமேசுவரம் ராமநாதசுவாமி, தூத்துக்குடி முத்தாரம்மன் கோயில், சென்னை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரா் கோயில், தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம் பெருவளூா், குமரி மாவட்டம் தாணுமாலையன் சுவாமி, திருவாரூா் மாவட்டம் முள்ளாட்சி மாரியம்மன் கோயில் ஆகியவற்றிலும் திருமண மண்டபம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. மேலும், கோவை வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் பக்தா்கள் தங்கும் கூடம், கள்ளக்குறிச்சியில் உதவி ஆணையா் அலுவலகம், சென்னை தங்கசாலை பிரசன்ன விநியாகா் கோயிலில் வணிக வளாகம், வேளச்சேரி தண்டீஸ்வரா் கோயிலில் பல்நோக்கு மண்டபம், சென்னையை அடுத்த வண்டலூா் நந்தீஸ்வரா் கோயிலில் வணிக வளாகம், தருமபுரி ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் ராஜகோபுரம் ஆகியன கட்டப்பட உள்ளன. மொத்தமாக ரூ.592.38 கோடி மதிப்பிலான 43 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் க.வீ.முரளீதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.