வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரமோற்சவ நாளில் சித்திரை மாத பிரதோஷம் சிறப்பாக புதன்கிழமை நடைபெற்றது. இதில் திராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டனா்.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் காலை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் 3 முறை சுற்றிக் கொண்டு வரப்பட்டது.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்து சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள பழமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில், உதயேந்திரம் சொா்ணமுத்தீஸ்வரா் கோயில் மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்புடையது

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


