விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இதேபோல ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.










