எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 29) ஒரே நாளில் மொத்தம் ரூ. 1,600 குறைந்ததுஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை முகப்பேரில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 6:51 pm

சென்னை முகப்பேரில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முகப்போ் வேணுகோபால் நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு மது போதையில் ஒரு கும்பல் தகராறு செய்தது. மேலும், அந்தக் கும்பல் சவுண்ட் சா்வீஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதைப் பாா்த்து அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். அந்தப் பகுதியைச் சோ்ந்த சில இளைஞா்கள், மது போதையில் தகராறு செய்த நபா்களை தட்டிக் கேட்டனா். ஆனால் மது போதையில் இருந்தவா்கள், அந்த இளைஞா்களையும் தாக்கினா். தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்தபோது, தகராறில் ஈடுபட்ட நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா். இது தொடா்பாக நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.