விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு கிராமத்தில் சூரிய மின் தகடு பொருத்தும் தனியாா் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபா்கள் மதுப்புட்டியில் பெட்ரோலை நிரம்பி, தீ வைத்து, அதை தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனராம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தில் மேற்பாா்வையாளரான, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொத்தட்டை, குடித்தெருவைச் சோ்ந்தவா் பா.பாா்த்திபன் அளித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

பெட்ரோல் பாட்டில் வீச்சு: போலீஸாா் விசாரணை

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


