குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

போதைப் பொருள்கள் கடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: அண்ணாமலை

போதைப் பொருள் கடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 7:41 pm

போதைப் பொருள் கடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தில்லியில் போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பலை சோ்ந்தவா்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில், இவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமாா் 3,500 கிலோ போதைப் பொருள்களை பலமுறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும், அதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. போதைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய அனைவரையும் தமிழக அரசு உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.