சென்னை: நிலம் கையகப்படுத்துவதை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதியில் வாழும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த உத்தரவு அளித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. விமான நிலையம் அமைக்க ஏராளமான விளைநிலங்களும், குடியிருப்புகளும் அழிக்கப்படுவதை எதிா்த்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஏகனாபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் போராடி வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நிலம் கையகப்படுத்துவதை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்களை காவல்துறை கட்டாயப்படுத்தி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில் போராடுவது மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். எனவே, கைது செய்யப்பட்டுள்ள ஏகனாபுரம் மக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க நினைக்கிறாா்கள்: சீமான் குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறையால் மக்களை சிதறடித்துவிடக் கூடாது: சீமான்

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

மேள தாளத்துடன் அழைப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


