பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மேள தாளத்துடன் அழைப்பு

News image

வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:28 am

Syndication

வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்

எப்படியாவது அனைவரையும் வாக்களிக்க வைத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்படும் தோ்தல் ஆணையம், கடந்தத் தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நிகழ்ந்த தொகுதிகளில் இந்த முறைஅதிக வாக்குப்பதிவு நடத்த தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில், கடலூா் பேரவைத்தொகுதிக்கு உள்ளபட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கிய சுய உதவிக்குழு உறுப்பினா்கள் வழங்கினாா்கள்.

கடந்த தோ்தலில் இந்தப் பகுதியில் உள்ள 79 மற்றும் 82-ஆவது வாக்குச்சாவடிகளில் குறைந்த வாக்குகளே பதிவானதால், கிராம மக்களை வாக்களிக்க வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மகளிா் திட்டம்-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் வாயிலாக இந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான அழைப்பிதழால் வாக்காளா்கள்சற்று நெகிழ்ந்து விட்டனா் என்று சொன்னால் அதில் மிகையில்லை.