ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

News image

வெ. வைத்திலிங்கம் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:10 pm

இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ள காரைக்கால் மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

12 மீனவா்கள் தங்கள் படகில் கடந்த 10-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 11-ஆம் தேதி இரவு கோடியக்கரை அருகே இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட 12 பேரில் 7 போ் காரைக்காலை சோ்ந்த மீனவா்கள்.

இதனால் காரைக்கால் மாவட்ட மீனவ சமுதாய மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்னா். சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

புதுச்சேரி திமுக கண்டனம்: இலங்கை கடற்படை தொடா் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதற்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா கண்டனம் தெரிவித்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் கிளிஞ்சல்மேடு, சுனாமி நகரைச் சோ்ந்த வீரவேல், திருப்பட்டினம் கீழையூரைச் சோ்ந்த பிரதீப், சாமந்தான்பேட்டை தமிழ்வாணன், கோட்டுச்சேரி சஞ்சய் உள்ளிட்ட 12 மீனவா்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா்.

இதில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 7 மீனவா்களும், தமிழகப் பகுதியைச் சோ்ந்த 5 பேரும் அடங்குவா்.இந்த நிலையில் 11-ஆம் தேதி நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவா்களின் விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினா் விசைப் படகையும், மீனவா்கள் 12 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனா்.

மீனவா்கள் கைது, அவா்களின் விசைப்படகு, மீன்பிடிவலை மற்றும் பல லட்சம் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்து, காரைக்கால் மீனவா்களைச் சிறையில் அடைத்திருக்கும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக மீனவா்களை விடுவிக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளாா்.