முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

விஜய் வசந்த்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு விஜய் வசந்த் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மண்டபம் கடல் பகுதியிலிருந்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட மணக்குடியைச் சோ்ந்த 6 மீனவா்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. கடல் எல்லை பிரச்னையை மனிதாபிமான பாா்வையில் அணுக வேண்டிய நிலையில், தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து துன்புறுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மீனவா்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவா்கள் மீதான தொடா்ச்சியான கைது சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண இந்தியா - இலங்கை இடையே வலுவான பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.