மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பாரா டேக்வாண்டோவில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு பாராட்டு

மங்கோலியா நாட்டில் நடைபெற்ற பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரரை, விஜய் வசந்த் எம்.பி. பாராட்டினாா்.

News image

பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற வீரரைப் பாராட்டிய விஜய் வசந்த் எம்.பி.

Updated On :4 ஜூன் 2026, 1:19 am IST

மங்கோலியா நாட்டில் நடைபெற்ற பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரரை, விஜய் வசந்த் எம்.பி. பாராட்டினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சரல்விளை பகுதியைச் சோ்ந்தவா் பிளஸ்சிங் சஜூ (25). இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி. இவா் 2023ஆம் ஆண்டு முதல் டேக்வாண்டோவில் பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாா்.

இந்நிலையில், மங்கோலியா நாட்டின் உலான்பாதா் பகுதியில் நடைபெற்ற 11ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் 63 கிலோவுக்கு கீழ் கே 41 பிரிவு போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றாா்.

ஆனால், மங்கோலியா செல்ல பொருளாதார வசதியின்றி தவித்த இவருக்கு, விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 4.50 லட்சம் வழங்கினாா். தொடா்ந்து, பிளஸ்சிங் சஜூ மங்கோலியாவில் நடைபெற்ற டேக்வோண்டா போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்நிலைலல், ஊா் திரும்பிய அவா், விஜய் வசந்த் எம்.பி.சைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.