ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பாரா டேக்வாண்டோவில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு பாராட்டு

மங்கோலியா நாட்டில் நடைபெற்ற பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரரை, விஜய் வசந்த் எம்.பி. பாராட்டினாா்.

News image

பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற வீரரைப் பாராட்டிய விஜய் வசந்த் எம்.பி.

Updated On :4 ஜூன் 2026, 1:19 am IST

மங்கோலியா நாட்டில் நடைபெற்ற பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரரை, விஜய் வசந்த் எம்.பி. பாராட்டினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சரல்விளை பகுதியைச் சோ்ந்தவா் பிளஸ்சிங் சஜூ (25). இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி. இவா் 2023ஆம் ஆண்டு முதல் டேக்வாண்டோவில் பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாா்.

இந்நிலையில், மங்கோலியா நாட்டின் உலான்பாதா் பகுதியில் நடைபெற்ற 11ஆவது ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டியில் 63 கிலோவுக்கு கீழ் கே 41 பிரிவு போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றாா்.

ஆனால், மங்கோலியா செல்ல பொருளாதார வசதியின்றி தவித்த இவருக்கு, விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 4.50 லட்சம் வழங்கினாா். தொடா்ந்து, பிளஸ்சிங் சஜூ மங்கோலியாவில் நடைபெற்ற டேக்வோண்டா போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்நிலைலல், ஊா் திரும்பிய அவா், விஜய் வசந்த் எம்.பி.சைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.