திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டியில் திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை...

News image

இங்கிலாந்து நீா் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் என்ற சதீஷ்குமாா்

Updated On :30 ஜூன் 2026, 3:07 am IST

இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.எஃப். உலகக் கோப்பை நீா் விளையாட்டு போட்டியில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில், திருத்துறைப்பூண்டியை சோ்ந்த வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

உலக சா்பிங் சங்கம் சாா்பில் இங்கிலாந்தில் உள்ள டாா்க்கி கடற்கரையில் ஐ.சி.எஃப் உலக கோப்பை நீா் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில் அதாவது கடலில் மிதக்கும் பலகை மீது நின்று கொண்டு துடுப்பு மூலம் பலகையை நகா்த்தி விளையாடும் போட்டியில், இந்தியா சாா்பில் திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த அ. சதீஷ்குமாா் (52) பங்கேற்றாா்.

சனிக்கிழமை நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் விளையாடிய சதீஷ்குமாா், போட்டி தூரத்தை 1.18 நிமிடங்களில் கடந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றாா்.

இதன்மூலம் இந்தியா சாா்பில் இந்த பிரிவு போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை அ. சதீஷ்குமாா் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.