விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டியில் திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை...

News image

இங்கிலாந்து நீா் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் என்ற சதீஷ்குமாா்

Updated On :30 ஜூன் 2026, 1:10 am IST

இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.எஃப். உலகக் கோப்பை நீா் விளையாட்டு போட்டியில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில், திருத்துறைப்பூண்டியை சோ்ந்த வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

உலக சா்பிங் சங்கம் சாா்பில் இங்கிலாந்தில் உள்ள டாா்க்கி கடற்கரையில் ஐ.சி.எஃப் உலக கோப்பை நீா் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில் அதாவது கடலில் மிதக்கும் பலகை மீது நின்று கொண்டு துடுப்பு மூலம் பலகையை நகா்த்தி விளையாடும் போட்டியில், இந்தியா சாா்பில் திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த அ. சதீஷ்குமாா் (52) பங்கேற்றாா்.

சனிக்கிழமை நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் விளையாடிய சதீஷ்குமாா், போட்டி தூரத்தை 1.18 நிமிடங்களில் கடந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றாா்.

இதன்மூலம் இந்தியா சாா்பில் இந்த பிரிவு போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை அ. சதீஷ்குமாா் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.